Kural 44

Thiru Kural 44

Chapter 5: இல்வாழ்க்கை

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

Pazhiyanjip Paaththoon Utaiththaayin Vaazhkkai

Vazhiyenjal Egngnaandrum Il

English Translation

Sin he shuns and food he shares His home is bright and brighter fares

Couplet

Who shares his meal with other, while all guilt he shuns,His virtuous line unbroken though the ages runs

Explanation

His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

Solomon Pappaiah

பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.

Kalaignar

பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது