Chapter 5

இல்வாழ்க்கை

Ilvaazhkkai

Domestic Life

10 kurals

Kural 41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
The ideal householder is he Who aids the natural orders there
Kural 42 துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
His help the monk and retired share, And celibate students are his care
Kural 43 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
By dutiful householder's aid God, manes, kin, self and guests are served
Kural 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
Sin he shuns and food he shares His home is bright and brighter fares
Kural 45 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
In grace and gain the home excels, Where love with virtue sweetly dwells
Kural 46 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்?
Who turns from righteous family To be a monk, what profits he?
Kural 47 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
Of all who strive for bliss, the great Is he who leads the married state
Kural 48 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
Straight in virtue, right in living Make men brighter than monks praying
Kural 49 அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
Home-life and virtue, are the same; Which spotless monkhood too can claim
Kural 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
He is a man of divine worth Who lives in ideal home on earth