Kural 514

Thiru Kural 514

Chapter 52: தெரிந்து வினையாடல்

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.

Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan

Veraakum Maandhar Palar

English Translation

Though tried and found fit, yet we see Many differ before duty

Couplet

Even when tests of every kind are multiplied,Full many a man proves otherwise, by action tried

Explanation

Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.

Solomon Pappaiah

எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

Kalaignar

எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்