Kural 551

Thiru Kural 551

Chapter 56: கொடுங்கோன்மை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து.

Kolaimerkon Taarir Kotidhe Alaimerkontu

Allavai Seydhozhukum Vendhu

English Translation

The unjust tyrant oppressor Is worse than cruel murderer

Couplet

Than one who plies the murderer's trade, more cruel is the kingWho all injustice works, his subjects harassing

Explanation

The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

Solomon Pappaiah

குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.

Kalaignar

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்