Kural 68

Thiru Kural 68

Chapter 7: மக்கட்பேறு

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

Thammindham Makkal Arivutaimai Maanilaththu

Mannuyirk Kellaam Inidhu

English Translation

With joy the hearts of parents swell To see their children themselves excel

Couplet

Their children's wisdom greater than their own confessed,Through the wide world is sweet to every human breast

Explanation

That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

Solomon Pappaiah

தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.

Kalaignar

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்