Chapter 7

மக்கட்பேறு

Pudhalvaraip Perudhal

The Wealth of Children

10 kurals

Kural 61 பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
The world no higher bliss bestows Than children virtuous and wise
Kural 62 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
No evil comes and no blemish; Noble sons bring all we wish
Kural 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
Children are one's wealth indeed Their wealth is measured by their deed
Kural 64 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
The food is more than nectar sweet In which one's children hands insert
Kural 65 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
Children's touch delights the body Sweet to ears are their words lovely
Kural 66 குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
The flute and lute are sweet they say Deaf to baby's babble's lay!
Kural 67 தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
A father's duty to his son is To seat him in front of the wise
Kural 68 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
With joy the hearts of parents swell To see their children themselves excel
Kural 69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
The mother, hearing her son's merit Delights more than when she begot
Kural 70 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.
The son to sire this word is debt "What penance such a son begot!"