Kural 730

Thiru Kural 730

Chapter 73: அவை அஞ்சாமை

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.

Ulareninum Illaarotu Oppar Kalananjik

Katra Selachchollaa Thaar

English Translation

They are breathing dead who dare not Empress before the wise their art

Couplet

Who what they've learned, in penetrating words know not to say,The council fearing, though they live, as dead are they

Explanation

Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

Solomon Pappaiah

அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.

Kalaignar

தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்