Kural 763

Thiru Kural 763

Chapter 77: படை மாட்சி

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.

Oliththakkaal Ennaam Uvari Ela�ppakai

Naakam Uyirppak Ketum

English Translation

Sea-like ratfoes roar What if? They perish at a cobra's whiff

Couplet

Though, like the sea, the angry mice send forth their battle cry;What then? The dragon breathes upon them, and they die

Explanation

What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.

Solomon Pappaiah

பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.

Kalaignar

எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்