Kural 8

Thiru Kural 8

Chapter 1: கடவுள் வாழ்த்து

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal

Piravaazhi Neendhal Aridhu

English Translation

Who swims the sea of vice is he Who clasps the feet of Virtue's sea

Couplet

Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,'Tis hard the further bank of being's changeful sea to attain

Explanation

None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது

Solomon Pappaiah

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்

Kalaignar

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல