Chapter 1

கடவுள் வாழ்த்து

Katavul Vaazhththu

The Praise of God

10 kurals

Kural 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world
Kural 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
That lore is vain which does not fall At His good feet who knoweth all
Kural 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
Long they live on earth who gain The feet of God in florid brain
Kural 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
Who hold His feet who likes nor loathes Are free from woes of human births
Kural 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
God's praise who tell, are free from right And wrong, the twins of dreaming night
Kural 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
They prosper long who walk His way Who has the senses signed away
Kural 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
His feet, whose likeness none can find, Alone can ease the anxious mind
Kural 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
Who swims the sea of vice is he Who clasps the feet of Virtue's sea
Kural 9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divine
Kural 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
The sea of births they alone swim Who clench His feet and cleave to Him