Kural 859

Thiru Kural 859

Chapter 86: இகல்

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு.

Ikalkaanaan Aakkam Varungaal Adhanai

Mikalkaanum Ketu Thararku

English Translation

Fortune favours when hate recedes Hatred exceeding ruin breeds

Couplet

Men think not hostile thought in fortune's favouring hour,They cherish enmity when in misfortune's power

Explanation

At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.

Solomon Pappaiah

ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.

Kalaignar

ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்