Kural 91

Thiru Kural 91

Chapter 10: இனியவை கூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

Insolaal Eeram Alaiip Patiruilavaam

Semporul Kantaarvaaich Chol

English Translation

The words of Seers are lovely sweet Merciful and free from deceit

Couplet

Pleasant words are words with all pervading love that burn;Words from his guileless mouth who can the very truth discern

Explanation

Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

Solomon Pappaiah

அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

Kalaignar

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்