Chapter 10

இனியவை கூறல்

Iniyavaikooral

The Utterance of Pleasant Words

10 kurals

Kural 91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
The words of Seers are lovely sweet Merciful and free from deceit
Kural 92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
Sweet words from smiling lips dispense More joys than heart's beneficence
Kural 93 முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
Calm face, sweet look, kind words from heart Such is the gracious virtue's part
Kural 94 துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
Whose loving words delight each one The woe of want from them is gone
Kural 95 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
To be humble and sweet words speak No other jewel do wise men seek
Kural 96 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
His sins vanish, his virtues grow Whose fruitful words with sweetness flow
Kural 97 நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
The fruitful courteous kindly words Lead to goodness and graceful deeds
Kural 98 சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
Kind words free from meanness delight This life on earth and life the next
Kural 99 இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?
Who sees the sweets of sweetness here To use harsh words how can he dare?
Kural 100 இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
Leaving ripe fruits the raw he eats Who speaks harsh words when sweet word suits