Kural 97

Thiru Kural 97

Chapter 10: இனியவை கூறல்

நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.

Nayan Eendru Nandri Payakkum

Payaneendru Panpin Thalaippiriyaach Chol

English Translation

The fruitful courteous kindly words Lead to goodness and graceful deeds

Couplet

The words of sterling sense, to rule of right that strict adhere,To virtuous action prompting, blessings yield in every sphere

Explanation

That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

Solomon Pappaiah

பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.

Kalaignar

நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்