Kural 983

Thiru Kural 983

Chapter 99: சான்றாண்மை

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால் ஊன்றிய தூண்.

Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu

Aindhusaal Oondriya Thoon

English Translation

Love, truth, regard, modesty, grace These five are virtue's resting place

Couplet

Love, modesty, beneficence, benignant grace,With truth, are pillars five of perfect virtue's resting-place

Explanation

Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

Solomon Pappaiah

மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

Kalaignar

அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்