Chapter 107

இரவச்சம்

Iravachcham

The Dread of Mendicancy

10 kurals

Kural 1061 கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.
Not to beg is billions worth E'en from eye-like friends who give with mirth
Kural 1062 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
Let World-Maker loiter and rot If "beg and live" be human fate
Kural 1063 இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
Nothing is hard like hard saying "We end poverty by begging"
Kural 1064 இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
All space is small before the great Who beg not e'en in want acute
Kural 1065 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
Though gruel thin, nothing is sweet Like the food earned by labour's sweat
Kural 1066 ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.
It may be water for the cow Begging tongue is mean anyhow
Kural 1067 இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
If beg they must I beg beggers Not to beg from shrinking misers
Kural 1068 இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
The hapless bark of beggary splits On the rock of refusing hits
Kural 1069 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
The heart at thought of beggars melts; It dies at repulsing insults
Kural 1070 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
The word "No" kills the begger's life Where can the niggard's life be safe?