Chapter 109

தகை அணங்குறுத்தல்

Thakaiyananguruththal

The Pre-marital love

10 kurals

Kural 1081 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
Is it an angel? A fair peacock Or jewelled belle? To my mind a shock!
Kural 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
The counter glances of this belle Are armied dart of the Love-Angel
Kural 1083 பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
Not known before -I spy Demise In woman's guise with battling eyes
Kural 1084 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
This artless dame has darting eyes That drink the life of men who gaze
Kural 1085 கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
Is it death, eye or doe? All three In winsome woman's look I see
Kural 1086 கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
If cruel brows unbent, would screen Her eyes won't cause me trembling pain
Kural 1087 கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
Vest on the buxom breast of her Looks like rutting tusker's eye-cover
Kural 1088 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
Ah these fair brows shatter my might Feared by foemen yet to meet
Kural 1089 பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
Which jewel can add to her beauty With fawn-like looks and modesty?
Kural 1090 உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
To the drunk alone is wine delight Nothing delights like love at sight