Chapter 27

தவம்

Thavam

Penance

10 kurals

Kural 261 உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
Pains endure; pain not beings This is the type of true penance
Kural 262 தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
Penance is fit for penitents Not for him who in vain pretends
Kural 263 துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.
Is it to true penitent's aid, That others austere path avoid?
Kural 264 ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
In penance lies the power to save The friends and foil the foe and knave
Kural 265 வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
What they wish as they wish is won Here hence by men penance is done
Kural 266 தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
Who do penance achieve their aim Others desire-rid themselves harm
Kural 267 சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
Pure and bright gets the gold in fire; and so the life by pain austere
Kural 268 தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
He worship wins from every soul Who Master is by soul control
Kural 269 கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
They can even defy death Who get by penance godly strenth
Kural 270 இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
Many are poor and few are rich For they care not for penance much