Chapter 47

தெரிந்து செயல்வகை

Therindhuseyalvakai

Acting after due Consideration

10 kurals

Kural 461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
Weigh well output the loss and gain And proper action ascertain
Kural 462 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்
Nothing is hard for him who acts With worthy counsels weighing facts
Kural 463 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
The wise risk not their capital In doubtful gains and lose their all
Kural 464 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
They who scornful reproach fear Commence no work not made clear
Kural 465 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
Who marches without plans and ways His field is sure to foster foes
Kural 466 செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
Doing unfit action ruins Failing fit-act also ruins
Kural 467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
Think and dare a proper deed Dare and think is bad in need
Kural 468 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
Toil without a plan ahead Is doomed to fall though supported
Kural 469 நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
Attune the deeds to habitude Or ev'n good leads to evil feud
Kural 470 எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
Do deeds above reproachfulness The world refutes uncomely mess