ஏன் விழுந்தாய் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Pattaya Kelappanum Pandiya (2014) (பட்டய கேளப்பனும் பாண்டியா)
Music
Aruldev
Year
2014
Singers
Swetha Mohan
Lyrics
ஏன் விழுந்தாய் என் விழிகளில்
நீ நிறைந்தாய் என் மனதினில்
காற்றில் பறக்கும் சிறகாய்
நான் மெதுவாய் கரைகிறேன்
வந்த நேரம் அந்தி நேரம் நெஞ்சின் ஓரம் ஏதோ ஆச்சே
கொஞ்ச நேரம் அந்த நேரம் கண்ணில் ஈரம் காய்ந்தே போச்சே
இமைகள் மூடாமலே இதயம் தாங்காமலே ஹய்யோ
விழியினில் தின்றாய் என்னை

 ஏன் விழுந்தாய் என் விழிகளில்
நீ நிறைந்தாய் என் மனதினில்
காற்றில் பறக்கும் சிறகாய்
நான் மெதுவாய் கரைகிறேன்
வந்த நேரம் அந்தி நேரம் நெஞ்சின் ஓரம் ஏதோ ஆச்சே
கொஞ்ச நேரம் அந்த நேரம் கண்ணில் ஈரம் காய்ந்தே போச்சே
இமைகள் மூடாமலே இதயம் தாங்காமலே ஹய்யோ
விழியினில் தின்றாய் என்னை

 என் வானில் எனக்கென ஒரு மேகம்
தாகம் தீர்த்தே போகும் அஹா…
ஜன்னல் தாண்டி தென்றலும் தழுவி தழுவி தலை கோதுமே
மின்னல் தீண்டி ஜீவனும் தழும்பி தழும்பி அலை மோதுமே
ஒரு நூறு ஜென்மம் வேண்டும் உன் அருகே
விழியினில் தின்றாய் என்னை

 ஆஹா ஹா… எனக்குள்ளே ஒரு சாரல் வீசும் உன்னால் தானே
ஆஹா ஹா உன் சுவாசம் கையில் அள்ளியே பருகி பருகி உயிர் வாழ்கிறேன்
புது நேசம் நெஞ்சில் ஏந்தியே உருகி உருகி நான் போகிறேன்
ஒரு கோடி ஆண்டுகள் வேண்டும் உன் நிழலே
விழியினில் தின்றாய் என்னை
ஏன் விழுந்தாய் என் விழிகளில்
நீ நிறைந்தாய் என் மனதினில்
காற்றில் பறக்கும் சிறகாய்
நான் மெதுவாய் கரைகிறேன் ஹா…
வந்த நேரம் அந்தி நேரம் நெஞ்சின் ஓரம் ஏதோ ஆச்சே
கொஞ்ச நேரம் அந்த நேரம் கண்ணில் ஈரம் காய்ந்தே போச்சே
இமைகள் மூடாமலே இதயம் தாங்காமலே ஹய்யோ
விழியினில் தின்றாய் என்னை