Kural 1005

Thiru Kural 1005

Chapter 101: நன்றியில் செல்வம்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடியுண் டாயினும் இல்.

Kotuppadhooum Thuyppadhooum Illaarkku Atukkiya

Kotiyun Taayinum Il

English Translation

What is the good of crores they hoard To give and enjoy whose heart is hard

Couplet

Amid accumulated millions they are poor,Who nothing give and nought enjoy of all they store

Explanation

Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

Solomon Pappaiah

தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.

Kalaignar

கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை