Chapter 101

நன்றியில் செல்வம்

Nandriyilselvam

Wealth without Benefaction

10 kurals

Kural 1001 வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
Dead is he with wealth in pile Unenjoyed, it is futile
Kural 1002 பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு
The niggard miser thinks wealth is all He hoards, gives not is born devil
Kural 1003 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
A burden he is to earth indeed Who hoards without a worthy deed
Kural 1004 எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
What legacy can he leave behind Who is for approach too unkind
Kural 1005 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
What is the good of crores they hoard To give and enjoy whose heart is hard
Kural 1006 ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
Great wealth unused for oneself nor To worthy men is but a slur
Kural 1007 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
Who loaths to help have-nots, his gold Is like a spinster-belle grown old
Kural 1008 நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
The idle wealth of unsought men Is poison-fruit-tree amidst a town
Kural 1009 அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
Others usurp the shining gold In loveless, stingy, vicious hold
Kural 1010 சீருடைச் செல்வர் சிறுதுனி மார஧
வறங்கூர்ந் தனையது உடைத்து.
The brief want of the rich benign Is like rainclouds growing thin