Kural 1007

Thiru Kural 1007

Chapter 101: நன்றியில் செல்வம்

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று.

Atraarkkondru Aatraadhaan Selvam Mikanalam

Petraal Thamiyalmooth Thatru

English Translation

Who loaths to help have-nots, his gold Is like a spinster-belle grown old

Couplet

Like woman fair in lonelihood who aged grows,Is wealth of him on needy men who nought bestows

Explanation

The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

Solomon Pappaiah

ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.

Kalaignar

வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது