Kural 1018

Thiru Kural 1018

Chapter 102: நாணுடைமை

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்

அறம்நாணத் தக்கது உடைத்து.

Pirarnaanath Thakkadhu Thaannaanaa Naayin

Aramnaanath Thakkadhu Utaiththu

English Translation

Virtue is much ashamed of him Who shameless does what others shame

Couplet

Though know'st no shame, while all around asha med must be:Virtue will shrink away ashamed of thee

Explanation

Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

Solomon Pappaiah

மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.

Kalaignar

வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்