Kural 1019

Thiru Kural 1019

Chapter 102: நாணுடைமை

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

நாணின்மை நின்றக் கடை.

Kulanjutum Kolkai Pizhaippin Nalanjutum

Naaninmai Nindrak Katai

English Translation

Lapse in manners injures the race Want of shame harms every good grace

Couplet

'Twill race consume if right observance fail;'Twill every good consume if shamelessness prevail

Explanation

Want of manners injures one's family; but want of modesty injures one's character

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

Solomon Pappaiah

ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

Kalaignar

கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்