Kural 1028

Thiru Kural 1028

Chapter 103: குடிசெயல் வகை

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்.

Kutiseyvaark Killai Paruvam Matiseydhu

Maanang Karudhak Ketum

English Translation

No season have they who raise their race Sloth and pride will honour efface

Couplet

Wait for no season, when you would your house uprear;'Twill perish, if you wait supine, or hold your honour dear

Explanation

As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

Solomon Pappaiah

தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.

Kalaignar

தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்