Kural 1035

Thiru Kural 1035

Chapter 104: உழவு

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.

Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu

Kaiseydhoon Maalai Yavar

English Translation

Who till and eat, beg not; nought hide But give to those who are in need

Couplet

They nothing ask from others, but to askers give,Who raise with their own hands the food on which they live

Explanation

Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

Solomon Pappaiah

தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

Kalaignar

தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்