Kural 114

Thiru Kural 114

Chapter 12: நடுவு நிலைமை

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

Thakkaar Thakavilar Enpadhu Avaravar

Echchaththaar Kaanap Patum

English Translation

The worthy and the unworthy Are seen in their posterity

Couplet

Who just or unjust lived shall soon appear:By each one's offspring shall the truth be clear

Explanation

The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

Solomon Pappaiah

இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.

Kalaignar

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்