Kural 115

Thiru Kural 115

Chapter 12: நடுவு நிலைமை

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.

Ketum Perukkamum Illalla Nenjaththuk

Kotaamai Saandrork Kani

English Translation

Loss and gain by cause arise; Equal mind adorns the wise

Couplet

The gain and loss in life are not mere accident;Just mind inflexible is sages' ornament

Explanation

Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

Solomon Pappaiah

தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

Kalaignar

ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்