Kural 1244

Thiru Kural 1244

Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்

தின்னும் அவர்க்காணல் உற்று.

Kannum Kolachcheri Nenje Ivaiyennaith

Thinnum Avarkkaanal Utru

English Translation

Take these eyes and meet him, O heart Or their hunger will eat me out

Couplet

O rid me of these eyes, my heart; for they,Longing to see him, wear my life away

Explanation

O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

Solomon Pappaiah

நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.

Kalaignar

நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன