Kural 1245

Thiru Kural 1245

Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர்.

Setraar Enakkai Vitalunto Nenjeyaam

Utraal Uraaa Thavar

English Translation

He spurns our love and yet, O mind, Can we desert him as unkind?

Couplet

O heart, as a foe, can I abandon utterlyHim who, though I long for him, longs not for me

Explanation

O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?

Solomon Pappaiah

நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?

Kalaignar

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?