Kural 126

Thiru Kural 126

Chapter 13: அடக்கம் உடைமை

ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுநம்யும் ஏமாப் புடைத்து.

Orumaiyul Aamaipol Aindhatakkal Aatrin

Ezhumaiyum Emaap Putaiththu

English Translation

Who senses five like tortoise hold Their joy prolongs to births sevenfold

Couplet

Like tortoise, who the five restrainsIn one, through seven world bliss obtains

Explanation

Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

Solomon Pappaiah

ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.

Kalaignar

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்