Kural 127

Thiru Kural 127

Chapter 13: அடக்கம் உடைமை

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

Yaakaavaa Raayinum Naakaakka Kaavaakkaal

Sokaappar Sollizhukkup Pattu

English Translation

Rein the tongue if nothing else Or slips of tongue bring all the woes

Couplet

Whate'er they fail to guard, o'er lips men guard should keep;If not, through fault of tongue, they bitter tears shall weep

Explanation

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

Solomon Pappaiah

எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

Kalaignar

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்