Kural 129

Thiru Kural 129

Chapter 13: அடக்கம் உடைமை

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

Theeyinaar Suttapun Ullaarum Aaraadhe

Naavinaar Sutta Vatu

English Translation

The fire-burnt wounds do find a cure Tongue-burnt wound rests a running sore

Couplet

In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;In soul by tongue inflamed, the ulcer healeth never more

Explanation

The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

Solomon Pappaiah

ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

Kalaignar

நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது