Kural 130

Thiru Kural 130

Chapter 13: அடக்கம் உடைமை

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi

Arampaarkkum Aatrin Nuzhaindhu

English Translation

Virtue seeks and peeps to see Self-controlled savant anger free

Couplet

Who learns restraint, and guards his soul from wrath,Virtue, a timely aid, attends his path

Explanation

Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

Solomon Pappaiah

கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.

Kalaignar

கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்