Kural 1291

Thiru Kural 1291

Chapter 130: நெஞ்சொடு புலத்தல்

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா தது.

Avarnenju Avarkkaadhal Kantum Evannenje

Neeemakku Aakaa Thadhu

English Translation

You see, his heart is his alone; Why not my heart be all my own?

Couplet

You see his heart is his aloneO heart, why not be all my own

Explanation

O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?

Solomon Pappaiah

நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?

Kalaignar

நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?