Chapter 130

நெஞ்சொடு புலத்தல்

Nenjotupulaththal

Expostulation with Oneself

10 kurals

Kural 1291 அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.
You see, his heart is his alone; Why not my heart be all my own?
Kural 1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
O heart, you see how he slights me Yet you clasp him as if friendly
Kural 1293 கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
You follow him at will Is it "The fallen have no friends" my heart?
Kural 1294 இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
You won't sulk first and then submit Who will then consult you, my heart?
Kural 1295 பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
Frets to gain and fears loss in gain O my heart suffers ceaseless pain
Kural 1296 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
My itching mind eats me anon As I muse on him all alone
Kural 1297 நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
I forget shame but not his thought In mean foolish mind I'm caught
Kural 1298 எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
My heart living in love of him Hails his glory ignoring blame
Kural 1299 துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.
Who support a man in grief If lover's heart denies relief?
Kural 1300 தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
Why wonder if strangers disown When one's own heart is not his own?