Kural 1292

Thiru Kural 1292

Chapter 130: நெஞ்சொடு புலத்தல்

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

Uraaa Thavarkkanta Kannum Avaraich

Cheraaarenach Cheriyen Nenju

English Translation

O heart, you see how he slights me Yet you clasp him as if friendly

Couplet

'Tis plain, my heart, that he 's estranged from thee;Why go to him as though he were not enemy

Explanation

O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!

Solomon Pappaiah

என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!

Kalaignar

நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே