Kural 1293

Thiru Kural 1293

Chapter 130: நெஞ்சொடு புலத்தல்

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங்கு அவர்பின் செலல்.

Kettaarkku Nattaaril Enpadho Nenjenee

Pettaangu Avarpin Selal

English Translation

You follow him at will Is it "The fallen have no friends" my heart?

Couplet

'The ruined have no friends, 'they say; and so, my heart,To follow him, at thy desire, from me thou dost depart

Explanation

O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?

Solomon Pappaiah

நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?

Kalaignar

நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?