Kural 1312

Thiru Kural 1312

Chapter 132: புலவி நுணுக்கம்

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து.

Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai

Neetuvaazh Kenpaak Karindhu

English Translation

He sneezed while we went on sulking Expecting me to say "live long"

Couplet

One day we silent sulked; he sneezed: The reason well I knew;He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'

Explanation

When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

Solomon Pappaiah

நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்)

Kalaignar

ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்துவேன் என்று நினைத்து