Kural 1313

Thiru Kural 1313

Chapter 132: புலவி நுணுக்கம்

கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று.

Kottup Pooch Chootinum Kaayum

Oruththiyaik Kaattiya Sootineer Endru

English Translation

"For which lady?" she widely cries While I adorn myself with flowers

Couplet

I wreathed with flowers one day my brow, The angry tempest lowers;She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'

Explanation

Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

Solomon Pappaiah

ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.

Kalaignar

கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்