Kural 1314

Thiru Kural 1314

Chapter 132: புலவி நுணுக்கம்

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.

Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal

Yaarinum Yaarinum Endru

English Translation

"I love you more than all" I said "Than whom, than whom?" she sulked and chid

Couplet

'I love you more than all beside,' 'T was thus I gently spoke;'What all, what all?' she instant cried; And all her anger woke

Explanation

When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

Solomon Pappaiah

காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.

Kalaignar

``யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்'' என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு ``யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்'' எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்