Kural 156

Thiru Kural 156

Chapter 16: பொறையுடைமை

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்.

Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup

Pondrun Thunaiyum Pukazh

English Translation

Revenge accords but one day's joy Patience carries its praise for aye

Couplet

Who wreak their wrath have pleasure for a day;Who bear have praise till earth shall pass away

Explanation

The pleasure of the resentful continues for a day The praise of the patient will continue until (the final destruction of) the world

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

Solomon Pappaiah

தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

Kalaignar

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்