Kural 157

Thiru Kural 157

Chapter 16: பொறையுடைமை

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறனல்ல செய்யாமை நன்று.

Thiranalla Tharpirar Seyyinum Nonondhu

Aranalla Seyyaamai Nandru

English Translation

Though others cause you wanton pain Grieve not; from unjust harm refrain

Couplet

Though others work thee ill, thus shalt thou blessing reap;Grieve for their sin, thyself from vicious action keep

Explanation

Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

Solomon Pappaiah

கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது

Kalaignar

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்