Kural 203

Thiru Kural 203

Chapter 21: தீவினையச்சம்

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.

Arivinul Ellaan Thalaiyenpa Theeya

Seruvaarkkum Seyyaa Vital

English Translation

The wisest of the wise are those Who injure not even their foes

Couplet

Even to those that hate make no return of ill;So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil

Explanation

So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

Solomon Pappaiah

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

Kalaignar

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்