Kural 219

Thiru Kural 219

Chapter 22: ஒப்புரவறிதல்

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.

Nayanutaiyaan Nalkoorndhaa Naadhal Seyumneera

Seyyaadhu Amaikalaa Vaaru

English Translation

The good man's poverty and grief Is want of means to give relief

Couplet

The kindly-hearted man is poor in this alone,When power of doing deeds of goodness he finds none

Explanation

The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

Solomon Pappaiah

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

Kalaignar

பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்