Chapter 22

ஒப்புரவறிதல்

Oppuravaridhal

Duty to Society

10 kurals

Kural 211 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு.
Duty demands nothing in turn; How can the world recompense rain?
Kural 212 தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
All the wealth that toils give Is meant to serve those who deserve
Kural 213 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
In heav'n and earth 'tis hard to find A greater good than being kind
Kural 214 ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
He lives who knows befitting act Others are deemed as dead in fact
Kural 215 ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
The wealth that wise and kind do make Is like water that fills a lake
Kural 216 பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
Who plenty gets and plenty gives Is like town-tree teeming with fruits
Kural 217 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
The wealth of a wide-hearted soul Is a herbal tree that healeth all
Kural 218 இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
Though seers may fall on evil days Their sense of duty never strays
Kural 219 நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
The good man's poverty and grief Is want of means to give relief
Kural 220 ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
By good if ruin comes across Sell yourself to save that loss