Kural 216

Thiru Kural 216

Chapter 22: ஒப்புரவறிதல்

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.

Payanmaram Ulloorp Pazhuththatraal Selvam

Nayanutai Yaankan Patin

English Translation

Who plenty gets and plenty gives Is like town-tree teeming with fruits

Couplet

A tree that fruits in th' hamlet's central mart,Is wealth that falls to men of liberal heart

Explanation

The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

Solomon Pappaiah

பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.

Kalaignar

ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்