Kural 245

Thiru Kural 245

Chapter 25: அருளுடைமை

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

மல்லன்மா ஞாலங் கரி.

Allal Arulaalvaarkku Illai Valivazhangum

Mallanmaa Gnaalang Kari

English Translation

The wide wind-fed world witness bears: Men of mercy meet not sorrows

Couplet

The teeming earth's vast realm, round which the wild winds blow,Is witness, men of 'grace' no woeful want shall know

Explanation

This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kindhearted

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

Solomon Pappaiah

அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

Kalaignar

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று