Chapter 25

அருளுடைமை

Arulutaimai

Compassion

10 kurals

Kural 241 அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
The wealth of wealth is wealth of grace Earthly wealth e'en the basest has
Kural 242 நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
Seek by sound ways good compassion; All faiths mark that for-salvation
Kural 243 அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
The hearts of mercy shall not go Into dark worlds of gruesome woe
Kural 244 மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
His soul is free from dread of sins Whose mercy serveth all beings
Kural 245 அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
The wide wind-fed world witness bears: Men of mercy meet not sorrows
Kural 246 பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
Who grace forsake and graceless act The former loss and woes forget
Kural 247 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
This world is not for weathless ones That world is not for graceless swines
Kural 248 பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
The wealthless may prosper one day; The graceless never bloom agay
Kural 249 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
Like Truth twisted by confused mind Wisdom is vain in hearts unkind
Kural 250 வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.
Think how you feel before the strong When to the feeble you do wrong